திருக்குறள்

454.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற் கினத்துள தாகும் அறிவு.

திருக்குறள் 454

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற் கினத்துள தாகும் அறிவு.

பொருள்:

ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

மு.வரததாசனார் உரை:

ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.